கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள்.
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள்.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள் இடம்பெற்ற வருகின்றன.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் மக்கள் கூடுகைக்கான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் அப்பகுதிகளில் வீதி தடைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கனகபுரம், தேராவில், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்கள் கூடுகைக்கு நேற்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலைமுதல் அப்பகுதிகளில் வீதி தடைகளை அமைப்பதில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கனகபுரம் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் இவ்வாறு பொலிசார் வீதி தடையினை அமைத்து வருகின்றனர்.
நேற்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவினை நடைமுறைப்படுத்தம் வகையில் மக்கள் கூடுகையை தடுப்பதற்காக இவ்வாறு வீத தடை அமைக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
துயிலும் இல்ல எல்லைப்பகுதியின் இரு மருங்கிலும் இவ்வாறு வீதி தடை அமைக்கப்பட உள்ளதாகவும், துயிலுமில்ல பிரதேசத்தின் வாயில் பகுதியில் அதற்கான கண்காணிப்ப நிலையம் அமைக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியின் ஊடாக நடைபெறும் பாேக்குவரத்திற்கு எவ்வித தடைகளும் ஏற்படாது எனவும், துயிலுமில்லத்தில் மக்கள் ஒன்று கூடுவது தொடர்பில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை நடைமுறைப்படுத்தவதற்காகவே இவ்வீதி தடை அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை வழமைபோன்று முன்னெடுக்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வருடம் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளில் பதினையாயிரம் வரையான மக்கள் ஒன்று கூடிய பகுதியாக கனகபுரம் துயிலுமில்ல வளாகம் காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் நீதிமன்ற தடை உத்தரவுக்கு அமைவாக பொலிசாரினால் இவ்வாறு வீதி தடை அமைக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பிக்கும் நிலையில் பொலிஸ் வீதி தடை அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
டீ கடைக்குள் நுழைந்த டாட்டா ஏஸ் வாகனம்: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

டீ கடைக்குள் நுழைந்த டாட்டா ஏஸ் வாகனம்: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்!
மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.

மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.
98 வயதில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர்!

98 வயதில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர்!
கூரை மீது ஏறியவர் தவறி விழுந்து பலி.

கூரை மீது ஏறியவர் தவறி விழுந்து பலி.
புறா ஆசையைக்காட்டி 8 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!

புறா ஆசையைக்காட்டி 8 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!
லண்டனில் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் கொரோனாவுக்கு பலி!

லண்டனில் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் கொரோனாவுக்கு பலி!
இணையத்தில் வைரலாகும் சுவிட்சர்லாந்து போலீசின் ‘Jerusalema’ நடனம்.
இணையத்தில் வைரலாகும் சுவிட்சர்லாந்து போலீசின் ‘Jerusalema’ நடனம்.
நித்யானந்தாவுக்கு முன் தனிநாடு உருவாக்கிய பாதிரியாரின் பரிதாப முடிவு.

நித்யானந்தாவுக்கு முன் தனிநாடு உருவாக்கிய பாதிரியாரின் பரிதாப முடிவு.