புரெவியால் யாழில் தொடரும் மழை : 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு.
புரெவியால் யாழில் தொடரும் மழை : 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 756 குடும்பங்களை சேர்ந்த 2,941 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்தோடு காணாமல் போன மூன்று நபர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளதாகவும், 4 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும், மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 153 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 5 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை மற்றும் வேலணை ஆகிய பகுதிகளிலேயே குறித்த இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புரெவி சூறாவளியினால் ஏற்பட்ட கடும் மழை,பலத்தகாற்று மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் கோப்பாய் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட இருபாலைதெற்கு,இருபாலைகிழக்கு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தபுரம்,ஞானவைவரவர் கோயிலடி,வசந்தபுரம்,மடத்தடி போன்ற கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றாக செயலிழந்துள்ளது.
புதியசெம்மணிவீதி, கட்டப்பிராய் கலைமணிவீதி,சின்னக்கோவில்வீதி மற்றும் பலவீதிகள், ஒழுங்கைகள் மழை வெள்ளம்தேங்கியுள்ளதால் மக்கள்ளோக்குவரத்துசெய்யமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றார்கள்.
பயன்தரு மரங்கள் பலவும் முறிந்துவீழ்ந்துள்ளதுடன் வீதிப்போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இன்றுகாலைமுதல் குறித்த பிரதேசங்களின் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதேசசபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் மக்களின் நலன்களை பேணும்வகையிலும், இயல்பு நிலைமைகளை ஏற்படுத்துவதற்கும் கிராமசேவையாளர் ஊடாகவும்,பிரதேசசபையின் ஊடாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மக்களை வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் சிறுவர்கள் எவரையும் வெளியான பிரதேசங்களுக்கு நடமாட அனுமதிக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பிரதேசசெயலக அனர்த்தமுகாமைத்துவபிரிவுக்கும் பாதிப்புவிபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாகவும்,வெள்ளங்களை வெளியேற்றும் வகையில் துரிசுகளை திறப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிரதேசசபை உறுப்பினர் தெரிவித்தார்.
குறித்தபகுதி மக்களின் உணவுத்தேவையை பூர்த்திசெய்வதற்கு பொதுஅமைப்புக்கள், தன்னார்வ கொடையாளர்களின் உதவிகளையும் அப்பகுதிமக்கள் கோரியுள்ளனர்.
உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.

உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.
மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.
20 பொலிஸாருக்குக் கொரோனா.

20 பொலிஸாருக்குக் கொரோனா.
இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.
சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!
வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!
அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு
வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.
ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்
உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!

உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!