கலாபக்காதலன் அடித்துக் கொலை : காதலி மற்றொரு காதலனுடன் கைது!
கலாபக்காதலன் அடித்துக் கொலை : காதலி மற்றொரு காதலனுடன் கைது!
வாணியம்பாடி அருகே 17 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலனை, அடித்துக் கொலைசெய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதாக காதலியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை நிம்மையம் பட்டு சாலையில் உள்ள விவசாயக் கிணற்றில், சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்தனர்.
விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றுக்குள் சடலமாக வீசப்பட்டவர் ஆலங்காயம் பெத்தூரை சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது. அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போது, கணவனை இழந்த பெண்ணான கோகிலாவுடன் பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கோகிலாவிடம் நடத்திய விசாரணையில் நாகராஜ் கொலையின் மர்மம் விலகியது. கணவரை இழந்து வாழும் கோகிலாவுக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ள நிலையில் 8 ஆண்டுகளாக நாகராஜிடம், காதலுடன் பழகி வந்துள்ளார்.
இதனை சாதகமாக்கிய நாகராஜ், வயதிற்கு வந்த கோகிலாவின் இரு மகள்களிடமும் தனது சேட்டையை தொடங்கி இருக்கிறான். கோகிலா பலமுறை எச்சரித்தும் நாகராஜ் திருந்தாமல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கோகிலா தன்னுடன் தொழிற்சாலையில் பணிபுரியும் வெங்கடேசனிடம் இது தொடர்பாக கூறியுள்ளார். ஏற்கனவே கோகிலா உடன் தொடர்பில் இருந்த வெங்கடேசன் காதலிக்காக, நாகராஜை தீர்த்துக் கட்ட சம்மதித்துள்ளான்.
சம்பவத்தன்று வெங்கடேசனும், கோகிலாவும் சேர்ந்து நாகராஜை மது அருந்த செய்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி விவசாய கிணற்றில் வீசிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை சேகரித்த காவல்துறையினர் கோகிலாவையும் அவளது 2 வது காதலன் வெங்கடேசனையும் கொலை வழக்கில் கைது செய்தனர்.
ஏற்கனவே தந்தை இறந்த நிலையில் தாயும் ஜெயிலுக்கு சென்றுவிட்டதால் கோகிலாவின் மகள்கள் மற்றும் மகன்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.

இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.
பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!

பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!
வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.
கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.
முக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.

முக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.
தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்
எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்

எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்
இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.

இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.
விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!