தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
தொடர்ந்தும் தமிழர்களை அந்நியப்படுத்தாது அவர்களின் உள்ளங்களை வெற்றிக்கொள்ள அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் உப தலைவரும் ஊடக பேச்சாளருமான சமன் குமார் கூறுகையில் ,
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன கடந்த வாரம் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். எவ்வாறாயினும் அந்த ஏற்பாடுகளும் சுதந்திர தின நிகழ்வுகளும் எந்தவொரு இன மக்களையும் காயப்படுத்தி விட கூடாது என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
எனவே எதிர்வரும் சுதந்திர தினத்தன்று தமிழிலும் தேசிய கீதத்தை பாடி அரசாங்கத்தின் தேசிய இன நல்லிணக்கத்திற்கான சமிஞ்சையை வெளிப்படுத்த வேண்டும். இதனை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம்.
தமிழ் பேசும் மக்களும் இந்நாட்டு பிரஜைகள் . அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. எனவே இந்த மக்களை தொடர்ந்தும் அந்நியப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்படாது தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இதற்கு எதிர்வரும் சுதந்திர தினம் சிறப்பானதொரு சந்தர்ப்பமாகவே எமது கட்சி பார்க்கின்றது. பாராளுமன்றத்ததை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் அரசாங்கத்தை இந்த விடயத்தில் வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கையானது தமிழ் பேசும் சமூகத்தின் அனைவரது கோரிக்கையாக இருக்க வேண்டும்.
அதேபோன்று தமிழ் சமூகத்திலும் ஒரு வேண்டுகோளை விடுக்கிறோம். பெப்ரவரி 4ஆம் திகதி உங்கள் பிரதேசங்களில் ஏற்பாடு செய்திருக்கும் சுதந்திர நிகழ்வுகளில் தமிழிலேயே தேசியகீதத்தை பாடி எமது உரிமையை நாங்கள் பாதுகாக்குமாறு குறிப்பிட்டார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!
Doctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!

Doctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் - சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் - சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது
கிளிநொச்சியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய பழ.நெடுமாறன் குணமடைய விசேட வழிபாடு.

கிளிநொச்சியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய பழ.நெடுமாறன் குணமடைய விசேட வழிபாடு.
நிரவ் மோடியை நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி!

நிரவ் மோடியை நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி!
அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்!

அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்!
இந்த நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

இந்த நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!
பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை குப்பை தொட்டியில்!

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை குப்பை தொட்டியில்!