வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
வவுனியா நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக ஆணொருவரின் சடலம் ஒன்று நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் பஜார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக தலை சிதறிய நிலையில் காயங்களுடன் ஒருவர் காணப்பட்ட நிலையில் உடனடியாக மக்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் இரவு அனுமதித்தனர்.
எனினும் அவர் முன்பதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று (27.05.2022) இரவு 11.45 மணியளவில் வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன் பகுதியில் இரவு தலை சிதறிய நிலையில் வீதியின் நடைபாதையில் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதனை அவதானித்த மக்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் அவர் முன்பதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த நிலையில் குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் மேற் பகுதியில் விடுதி அமைந்துள்ள மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்துகொண்ட குறித்த நபர் இந்தியா நாட்டை சேர்ந்த 36 வயதுடைய சன்டிப் மலிக் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இவர் விடுதியில் தங்கியிருந்து நகை வேலை செய்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் மாடியிலிருந்து விழுந்து இறந்துள்ள நிலையில் இது கொலையா தற்கொலையா, அல்லது தவறி வீழ்ந்து இறந்துள்ளாரா என்ற கோணங்களில் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்
மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.
பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.