இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி நிவாரண பொருட்கள் பேக் செய்யப்பட்டு அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரண பொருட்களை ஏற்கனவே சென்னையில் இருந்து அனுப்பியது.
அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் புதுக்கோட்டை, நெல்லை, திருச்சி, திருவண்ணாமலை சிவகங்கை, மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகள் மூலம் தூத்துக்குடி குடோனுக்கு வரவழைக்கப்பட்டு பேக்கிங் செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பும் நடவடிக்கையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தூத்துக்குடி துறைமுகம் அருகில் உள்ள குடோன்களில் ஆய்வு செய்தார்.
இதில் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட 7 ஆயிரத்து 500 டன் அரிசியுடன் சேர்த்து தூத்துக்குடியிலிருந்து 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி என மொத்தம் 80 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசிகள், 28 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான 500 மெட்ரிக் டன் பால் பவுடர் ஆகிய பொருட்கள் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக இந்த பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த பொருட்கள் துறைமுகம் வழியாக விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்
மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.
பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.