மாணவியை தும்புத் தடியால் ஓட ஓட தாக்கிய அதிபர்.
மாணவியை தும்புத் தடியால் ஓட ஓட தாக்கிய அதிபர்.
பாடசாலை அதிபர் ஒருவர் மாணவி ஒருவரை தும்புத் தடியால் தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கொட்டக்கலை போகாவத்தை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரையே அதிபர் தும்புதடியால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கொட்டகலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் விருந்து விழாவிற்கு 300 ரூபாவினை தலா ஒவ்வொரு மாணவரும் தர வேண்டும் என பாடசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சில மாணவர்கள் குறித்த தொகையை செலுத்தியுள்ளதோடு சிலர் செலுத்த வில்லை.
இந்நிலையில், பணம் செலுத்தாத மாணவர் ஒருவரை, உடனடியாக பணத்தினை செலுத்துமாறு தகாத வார்த்தை பிரயோகங்களினால் பேசியுள்ளார்.
இதனை பார்வையிட்ட மாணவரின் மூத்த சகோதரி, ஐயா, தந்தை பாடசாலைக்கு அருகிலேயே கடமையாற்றுகின்றார், நான் பணத்தை வாங்கி தருகின்றேன், தம்பியை திட்ட வேண்டாம். என அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவியின் கோரிக்கையினை செவிமடுக்காத அதிபர் மாணவியை தொடர்ச்சியாக துரத்தி தும்புத் தடியால் தாக்கியுள்ளார்.
அதிபரின் தாக்குதலை தாங்க முடியாத மாணவி கதறியதால், பாடசாலைக்கு அருகில் கடமையாற்றிக்கொண்டிருந்த தந்தை அழுகைக்குரலை கேட்டு ஓடிவந்து, மகளை அதிபரின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளார்.
தனது புதல்வியை காப்பாற்றிய தந்தை அவரை அயலவர்களின் உதவியுடன் கொட்டகலை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மாணவிக்கு முதல் கட்ட சிகிச்சைகளை வழங்கிய கொட்டகலை வைத்திய அதிகாரி மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் தனது தாக்கப்பட்டுள்ளமையினால் அதனால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமாயின் பாடசாலை அதிபரே பொறுப்பினை ஏற்க வேண்டும் என மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான தனக்கு வருமானம் குறைந்தளவிலேயே கிடைப்பதினால் அதிபரால் கேட்கப்பட்ட 300 ரூபாவினையேனும் தன்னால் உரிய நேரத்திற்கு செலுத்த முடியாமல் போனதாகவும் மாணவியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது
சாமியாராக மாறிய நடிகை தமன்னா

சாமியாராக மாறிய நடிகை தமன்னா
மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்
யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து
துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ
முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி
என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?
அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா
100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!
டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!