கனடாவில் தெற்காசிய வணிகங்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவில் தெற்காசிய வணிகங்களை குறிவைத்து அதிகரித்துவரும் பணம் பறிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக பீல் பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது இதுபோன்ற 16 வழக்குகளை தாங்கள் விசாரித்து வருவதாக பீல் பொலிசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பலரும் சமூக ஊடக பக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளப்பட்டு, பணம் கேட்டு மிரட்டப்பட்டதாகவும் அல்லது தாக்குதலுக்கு இலக்காகலாம் என மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் தொழில், பெயர், அலைபேசி இலக்கம், முகவரி உள்ளிட்ட மொத்த தகவலும் திரட்டுப்பட்டு சந்தேக நபர்கள் மிரட்டல் விடுப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

எவரேனும் அச்சுறுத்தலுக்கு  ஆளானால் கண்டிப்பாக பணம் செலுத்த வேண்டாம் என்று பொலிஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பீல் பொலிசார் சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்றை நிறுவியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts