சட்டப்பேரவையில் 2 தனித்தீர்மானங்கள் நிறைவேற்றம்; ஒன்றுக்கு மட்டும் ஆதரவளித்த அதிமுக, பாஜக

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சட்டப்பேரவையில் 2 தனித் தீர்மானங்களை கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைக்கும் 2 மிக முக்கிய பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை மிக மோசமான எதேச்சாதிகார எண்ணம் என்றும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு என்பது தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைப்பதற்கான சதி என்றும் முதலமைச்சர் விமர்சித்தார்.  இந்த இரண்டும் மக்களாட்சியை குலைக்கும் செயல்கள் என்பதால், இவை இரண்டுக்கும் எதிராக அனைவரும் ஒருசேர குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Posts