நேருஜியின் நினைவஞ்சலி கூட்டம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

 நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபையின் ஆயுட் காப்பாளரும் நுவரெலியா மாநகரசபை முன்னாள் பிரதி முதல்வரும் மாநகரசபை உறுப்பினருமான எல். நேருஜியின் மறைவையொட்டி நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் ஆலய நிர்வாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் (17) சனிக்கிழமை நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.


 இக் கூட்டத்தில் திருமதி சுமதி நேருஜி, நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சநதன லால் கருணைரட்ன, முன்னாள் பிரதி முதல்வர் யதர்சனா புத்திரசிகாமணி, முன்னாள் மாநகரசபை உறுப்பினர்களான என். பி. சீ. தஹாநாயக்க, இரா. பாலகிருஷ்ணன் உட்பட ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்துக்கொண்டனர்.

Related Posts