நான்கு உடும்புகளுடன் மூவர் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக காட்டில் உடும்புகளை இறைச்சிக்காக பிடித்த மூவரை உடும்புகளுடன் புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

நேற்று (25.02.2024) மாலை இடம்பெற்ற குறித்த கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
புதுக்குடியிருப்பு கைவேலி 1 ஆம் வட்டார பகுதியில் காட்டில் உடும்புகளை வேட்டையாடி வருவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த காட்டுப்பகுதியில் உடும்புகளை பிடித்து இறைச்சிக்காக விற்பனை செய்ய முற்பட்ட  27 வயதுடைய இருவரும், 55  வயதுடைய  ஒருவரும் பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்களிடம் இருந்து நான்கு உடும்புகள் மீட்கப்பட்டுள்ளன.

 சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் புதுக்குடியிருப்பு பொலிசார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

Related Posts