தலீபான்களால் கைது செய்யப்பட்ட முதியவர் விடுதலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த 84 வயதான ஹெர்பெட் பிரிட்ஸ் என்ற முதியவரை தலீபான்கள் கைது செய்தனர். அவர் ஓராண்டுக்குமேல் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய ஆஸ்திரிய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது.

இந்நிலையில், ஓராண்டுக்குமேல் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹெர்பெட் பிரிட்சை தலீபான்கள் தற்போது விடுதலை செய்தனர். ஹெர்பெட் பிரிட்ஸ் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் ஆஸ்திரியா செல்ல உள்ளார்.

Related Posts