யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக் கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர்.

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று 28 மற்றும் நாளை 29 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தமும் கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய யாழ் பல்கலைக் கழகத்திலும்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர் சங்கத்தின் இன்று காலை 11 மணியளவிங் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் வேலை நிறுத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக  முன்னெடுத்த போராட்டத்தின் போது ஊழியர்களின் ஓய்வூதிய நிதிகளை கொள்ளையடிக்காதே, அரச பல்கலைக்கழக முறைமையை காப்பாற்று, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப சம்பள அதிகரிப்பை வழங்கு, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிணக்குகளிற்கு தீர்வை வழங்கு உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Posts