அரச வைத்தியசாலைகளில் தொடர்ந்து செயலிழக்கும் சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள் !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கரவனெல்ல பொது வைத்தியசாலையில் சி.டி. ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்துள்ளது என கதிரியக்க தொழிநுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் நாளாந்த ஆய்வுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

நாளொன்றுக்கு 50 நோயாளர்கள் ஸ்கேன் செய்யப்படுகிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.

களுத்துறை வைத்தியசாலையில் ஒரு வருடத்துக்கு மேல் சி.டி. ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்து காணப்படவதாகவும்,

கம்பஹா பொது வைத்தியசாலையிலும் இவ்வாறு சி.டி. ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். (P)



Related Posts