பிரச்சாரத்தை தொடங்கிய நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் முதல் வேட்பாளராக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

காளியம்மாள் கூறுகையில், "விவசாயமும் கடலும் சேர்ந்த இந்த பகுதியில் ஆட்சிகள் மாறினாலும் மக்களின் வாழ்வியல் அப்படியே உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம், மருத்துவத்தில் பின்தங்கியுள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறையில் சாமானிய பெண்ணாக போட்டியிடுகிறேன்.

 மயிலாடுதுறையில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை தொடங்கினாலே மாவட்டத்தில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம். நான் வெற்றி பெற்றால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்" என்றார்.

Related Posts