சாந்தன் அவர்களின் புகழுடலுக்கு பொது மக்கள் அஞ்சலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் வணக்கத்திற்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய நாளான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க நாளாக நினைவுகூற பொது அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் மக்கள் வணக்கம் செலுத்த ஏதுவாக அவரது தாய் மண்ணிற்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
வவுனியாவி,மாங்குளம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் சாந்தனின் வித்துடலுக்கு மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்படும் மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் அடுத்த நாளான திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இறுதி நினைவு வணக்கம் நடாத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் வணக்கம் செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Posts