BREAKING NEWS :- கனடாவில் 6 இலங்கையர்களின் கொலை துப்பாக்கி சூடு அல்ல

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடா தலைநகர் ஒட்டாவா பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி BBC செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் இரண்டு மாத சிசு ஒன்று உள்ளிட்ட நான்கு குழந்தைகள் அடங்குவதாக தெரிய வருகின்றது

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கனடாவிற்கு புதிதாக வருகைத் தந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு உயர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ள அதேவேளை, தந்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குறித்த குடும்பத்துடன் நெருங்கிய ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 19 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


“இது முற்றிலும் அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அர்த்தமற்ற வன்முறைச் செயல்” என ஒட்டாவாவின் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

35 வயதான தர்ஷினி திலந்திகா ஏக்கநாயக்க, அவரது 7 வயதாக குழந்தை இனுக்கா விக்ரமசிங்க, 4 வயதாக அஸ்வினி விக்ரமசிங்க, 2 வயதான ரியானா விக்ரமசிங்க மற்றும் 2 மாத சிசுவான கேலி விக்ரமசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், குறித்த குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை பேணிய 40 வயதான காமினி அமரகோன் என்ற நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது ஒட்டாவா பகுதியில் அண்மை காலத்தில் இடம்பெற்ற பாரிய மற்றும் மிக கொடூரமான கொலை என அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். (P)


Related Posts