எரிபொருள் விலையை மேலும் குறைக்க தயார்:எரிசக்தி அமைச்சர்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திருத்தப்பட்ட மின்சார சபை சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

‘நிலையான நாட்டிற்கு ஒரு வழி’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பங்குதாரர்களை அழைத்து விலை சூத்திரம் குறித்து கேட்டறிந்து எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாக அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார். (P)


Related Posts