அக்னி- 5 சோதனைக்கு வாழ்த்து கூறிய மோடி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


அக்னி- 5 எனும் ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் எரிபொருள் ஏவுகணையாகும். இது இந்தியாவை தாண்டி 5,500 கிமீ தொலைவிற்கு அப்பாலுள்ள இலக்கையும் தாக்கக்கூடிய வல்லமை உடைய ஏவகணையாகும். இது குறித்த சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளதாக தற்போது பிரதமர் மோடி அவர்கள், அக்னி -5 ஏவுகணை சோதனையில் ஈடுப்பட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை குறித்து மோடி, மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தில், MIRV தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறேன் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் யானை தாக்குதல் | ஒருவர் மரணம் | Thedipaar News

Related Posts