முன்னாள் கணவர் இருந்தால் தான் இரண்டாவது திருமணம்! ஓகே சொன்ன மாப்பிள்ளை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கிரிஷ் என்ற 36 வயது பெண் முதல் கணவரிடம் விவாகரத்து பெற்ற நிலையில் இரண்டாவதாக ஜேம்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்து கொள்ளும் முன்பு தன்னுடைய முன்னாள் கணவரான பிரண்ட்ன் என்பவரை தன்னுடன் அழைத்து வருவேன் என்று நிபந்தனை போட்டு உள்ளார். இதன் பின்னால் இருக்கும் காரணம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அதாவது க்ரிஷ் தனது முதல் கணவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். ஒரு நாள் கணவர் கார் விபத்தில் சிக்கிய நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டதால் ஆரம்பத்தில் அவருடன் வாழ்க்கை கழித்து விட நினைத்துள்ளார். ஆனால் நாளடைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் வந்த நிலையில் முதல் கணவரை விட்டு வர மனமில்லாமல் விவாகரத்து செய்துவிட்டு சட்டபூர்வமாக அவருக்கு பாதுகாவலராக இருக்க முடிவு செய்துள்ளார். அதன் பிறகு ஜேம்ஸ் உடன் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்து கொண்ட நிலையில் தன்னுடைய முன்னாள் கணவரையும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்த செயலை கண்டு புது மாப்பிள்ளைக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சிறுவர்களின் உயிர் காக்கும் புதிய தொழில்நுட்பம் | Thedipaar News

Related Posts