ஏமாற்றிய காதலனை ஆடையின்றி ரோட்டில் ஓடவிட்ட நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண். இந்த படத்தில் நடித்த ஆரம்பத்தில் இவருக்கு படங்கள் குவிந்தன. முதல் படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் கலக்கினார், இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருந்தனர். மெல்ல மெல்ல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தார், வரிசையாக அவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றி என்றாலும் ஒரு கட்டத்தில் இவரை சினிமா பக்கமே காணவில்லை. பின் திடீரென்று இன்ஸ்டா பக்கத்தை திறந்து கவர்ச்சி நடிகையாக போட்டோ ஷுட்கள் வெளியிட்டு வந்தார். நடிக்கும் போது கூட அளவாக தான் கவர்ச்சியில் நடித்தார் ஆனால் சோசியல் மீடியாவில் கவர்ச்சி எல்லை மீறுகிறது. இந்த நிலையில் நடிகை கிரண் ஒரு பேட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். 

அதில் அவர் பேசும்போது, என்னுடைய வேலை, கெரியர் எல்லாம் முடிந்த பிறகு எப்படியாவது இந்த வருடம் திருமணம் செய்து கொள்வேன். நான் ஒரு நபரை காதலித்தேன், அவருக்காக தான் சினிமாவை விட்டு வந்தேன். ஆனால் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை அடித்துவிட்டார் என்னால் அதை பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அதனால் அவரை ஒரு முறை வீட்டிற்கு வரவைத்து நானும் அடித்து ஆடைகளை அவிழ்த்து ரோட்டில் ஓட விட்டேன் என்று கிரண் பேசி இருக்கிறார். இவரது இந்த துணிச்சலான செயலுக்கு கிரணின் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். யாராக இருந்தால் தான் என்ன? ஒருவரை ஏமாற்றினால் கண்டிப்பாக தண்டனை கொடுக்கவேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts