ரொறன்ரோவில் உறவினர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவின் ரீஜன்ட் பார்க்கின் டுன்டாஸ் வீதியில் உறவினர்கள் மூன்று பேர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் ஆயுதத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

ரொறன்ரோவில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் மரணம் | Thedipaar News


Related Posts