நாட்டில் அதிகரிக்கும் நோய்! இரண்டு மாதங்களில் 7 பேர் உயிரிழப்பு !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்த மாதத்தில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 2,132 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெங்கு அதி அபாய வலயங்களாக 10 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 18,556 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு நோய் குறித்து மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. (P)


Related Posts