தூக்கு போடுவது போல வந்த கனவு! கனவை நிஜமாக்கிய கொடூரம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த நாகலட்சுமி இவருக்கு ஒரு மகன், மகள் உ ள்ள நிலையில், மகள் ஜனனி மயிலாப்பூரில் உள்ள பெண்கள் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, ஜனனி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார், ஜனனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவியின் அறையை சோதனை செய்த போது, ஜனனி எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், இரவில் தூங்கும் போது அடிக்கடி தூக்குப்போடுவது போன்ற கனவு வருகிறது. இதனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, 3 படத்தை போல நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன். அம்மா, அண்ணன் மற்றும் நண்பர்களை பிரிவது மிகவும் வருத்தமாக உள்ளது என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Posts