யாழில் கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ். சேண்டாங்குளம் கடலில் நீராடச் சென்ற மூவரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

ஆரியகுளத்தில் உள்ள தங்கும் விடுதியின் உரிமையாளரும், அங்கு பணிபுரிந்த இருவர் நேற்று கடலில் நீராடிக் கொண்டிருந்த நிலையில், மூவரும் நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவகருணாதாஸ் ஜூட் (வயது 37), வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த சிவநேசன் திவ்யன் (வயது 21) ஆகிய இருவருமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

 

கடலில் மூழ்கிவர்களை மீனவர்களும் பொலிஸாரும் இணைந்து கடற்பகுதியில் தேடியபோது அங்கு இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், காணாமல் போன மற்றையவரரை கண்டுபிடிக்க கடற்படை மற்றும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். (P)


Related Posts