உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா 120 ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசியது. இந்த தாக்குதலில் உக்ரைனின் தேசிய பல்கலைக்கழகம், சுகாதார நிலையம் உள்பட பல்வேறு கட்டிடங்கள் தீப்பிடித்து சேதம் அடைந்தன.

இந்த பல்கலைக்கழக வளாகத்தில் உக்ரைன் ராணுவ வீரர்கள் பலர் முகாமிட்டு இருந்தனர். எனவே ரஷியாவின் தாக்குதலில் அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Posts