எப்போதும் சிரித்து பேசும் அஜித் திடீரென அந்த நபர் மீது கோவம் கொண்டது ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. ரசிகர் மன்றமே வேண்டாம் என்றாலும் கூட நாளுக்கு நாள் இவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் இவரது பெயரில் ரசிகர்கள் செய்யும் உதவிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அஜித்தின் திரை வாழ்க்கையில் பல ஹிட் கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் சரண். இயக்குனர் சரண் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று வட்டாரம். இப்படம் வெளிவந்த சமயத்தில் பெரிதளவில் ஓடவில்லை. இருப்பினும் வித்தியாசமான கதைக்களம் என்பதால் எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படம். இப்படத்தை எடுத்து முடித்தபின் அஜித்திற்கு போட்டு காட்டியுள்ளாராம் இயக்குனர் சரண். 

படத்தை பார்த்து முடித்தபின், இந்த கதையை என்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேனே? ஏன் என்னிடம் சொல்லவில்லை என இயக்குனர் சரணிடம் கோபப்பட்டாராம்.ஆனால், வட்டாரம் திரைப்படத்தில் ஆர்யா போன்ற வளர்ந்து வரும் ஹீரோ நடித்தால் தான் நன்றாக இருக்கும் என அஜித்திடம் கூறினாராம் சரண். இந்த தகவலை இயக்குனர் சரண் சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். நாளும் நாள் அஜித் பற்றிய நல்ல விஷயங்களை அவருடன் பணியாற்றிய நபர்கள் பகிர்ந்து கொண்டு தான் உள்ளார்கள். இருப்பினும் அஜித் விஜயகாந்த் இறப்பிற்கு செல்லாதது அவர் மீது படிந்த கருப்பு புள்ளி போன்று தான் பார்க்கப்படுகிறது.

Related Posts