பிரம்டனில் வீதியில் வன்முறையில் ஈடுபட்ட 4 பேரை தேடும் பொலிஸார்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரம்டனில் வீதியொன்றில் வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர். இவர்கள் ஈகள்ரிட்ஜ் மற்றும் டோர்பிராம் வீதிகளுக்கு அருகாமையில் வாகனமொன்றில் சென்ற நபரை தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் நான்கு இளைஞர்களுக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது. மோதலில் ஈடுபட்ட 28 வயதான ஆகாஸ்டீப் சிங் மற்றும் 23 வயதான ராமன்பிரீட் மாசியா ஆகியோரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 

 ஏனைய இருவரும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர்கள் தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Posts