கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு ! விஹாரையின் பாதுகாவலர் கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


கண்டி பிரதேசத்தில் உள்ள விஹாரையொன்றின் கராஜிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மெனிக்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுரைடயவராவார்.

கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உயிரிழந்தவரின் கை, கால்கள்  கயிற்றினால் கட்டப்பட்டிருந்த நிலையில் இவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விஹாரையின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த காவலாளி ஒருவர் பொலிஸாரால்  சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (P)

4 வயது சிறுமி மரணம் ; நால்வர் கைது! | Thedipaar News

Related Posts