அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம், பல வகையான அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

அதன்படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 850 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதனை 375 என்ற புதிய விலைக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதன் புதிய விலை 445 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

வெள்ளைப்பூடு கிலோவொன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 680 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் பாகிஸ்தான் உருளைக்கிழங்கின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மைசூர் பருப்பு கிலோவொன்றின் விலை 7 ரூபாவினாலும் பச்சை அரிசியின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

கச்சத்தீவை அரசியலுக்காக கையாள்வதை தமிழகமும், மத்திய அரசும் கைவிட வேண்டும்! | Thedipaar News

Related Posts