உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரை சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் ஆதரித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர் நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து வாக்குசேகரிக்க உள்ளார். 

இதையொட்டி கோத்தகிரி வழியாக சாலை மார்க்கமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊட்டிக்கு நேற்று வர இருந்தார். ஆனால் திடீரென்று பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு வந்தார்.

இதன்படி கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி அருகேயுள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பயணித்து வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் திடீரென சோதனை செய்தனர். 

அப்போது அங்கு இருந்த பை உள்பட அனைத்தையும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பணமோ, பொருட்களோ சிக்கவில்லை.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! | Thedipaar News

Related Posts