12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 24 ஆம் திகதி நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா – எல, கட்டுநாயக்க, சீதுவை, களனி, பியகம, மஹர, கந்தானை மற்றும் மினுவாங்கொட ஆகிய பகுதிகளிலே நீர் விநியோகம் தடை அமுலாக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. (P)


Related Posts