ரொறன்ரோவில் மோசடியில் சிக்கி பணத்தை இழந்த இந்திய பெண்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவைச் சேர்ந்த தேவான்சி பொட்டார் என்ற பெண் ஆன்லைன் மோசடி மூலம் 15000 டொலர்களை இழந்துள்ளார். அந்த தொகை தனது வாழ் நாள் சேமிப்பு என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

2022ல் கனடாவிற்குள் குடியேறிய தேவான்சி தொழில் வாய்ப்பு ஒன்றிற்காக காத்திருந்தார் . இன்ஸ்டாகிராமில் செய்யப்பட்ட விளம்பரம் ஒன்றின் மூலம் தேவான்சி மோசடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வோல்மார்ட் நிறுவனம் பகுதிநேர பணிகளை வழங்குவதாக விளம்பரம் செய்யப்பட்டு, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

 எவ்வாறெனினும் வோல்மார்ட் நிறுவனம் இவ்வாறான எந்தவொரு தொழில் வாய்ப்பினையும் வழங்கவில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Posts