ஷாபி வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசியல் செய்ததில்லை என அத்துரலியே ரதன தேரர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றும் போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“ஷாபி ஷஹாப்தீன் சம்பவம் பொய்யானதா? வழக்கு முடிந்ததா? இல்லையே, நீதிவான் நீதிமன்றில் இன்னும் வழக்கு நிலுவையில் உள்ளது. எதிர்கட்சியினர் எல்லோரும் ஷாபி ஷஹாப்தீனை நிரபராதி என கதைக்கிறார்கள்.. ஷாபி ஷஹாப்தீன் நீதிமன்றினால் நிரபராதி என்றால் எனக்கு ஆட்சேபனைகள் இல்லை. வழக்கு நிலுவையில் இருக்கும் போதே இவ்வாறு கூறுவது என்பது இனவாதமானது.” (P)


Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்