ரொறன்ரோவில் முதலீட்டு மோசடி: 2 லட்சம் டொலர்களை இழந்த நபர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவர் முதலீட்டு மோசடியில் சிக்கி இரண்டு லட்சம் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளார். மோசடியுடன் தொடர்புடைய 24 வயதான அர்விந்தர் சிங் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இணைய வழியாக பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பெற்றுக்கொண்டு இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.முதலீட்டுக்கு கூடுதல் இலாபம் கிடைக்கப் பெறும் என பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

போலி முதலீட்டு வாய்ப்பு குறித்து அர்விந்தர் சிங் இணைய வழியாக பிரச்சாரம் செய்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முதலீட்டு மோசடிகளில் சிக்கியவர்கள் அல்லது அது குறித்த தகவல் தெரிந்தவர்கள் விபரங்களை பொலிஸாருக்கு தெரிவிக்கலாம். 

தக்காளி 10 ரூபாவுக்கு கொள்வனவு ; விவசாயிகள் பாதிப்பு | Thedipaar News

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்