பாலை, முதிரைக் குற்றிகள் பதுக்கல் ; இருவர் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் பாலை மற்றும் முதிரைக் குற்றிகள் சட்ட விரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை யாழ் மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெட்டப்பட்டு முத்திரை மற்றும் பாலை மர தீராந்திகள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு கொண்டு வரப்பட்டதாக வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து  நேற்று முன்தினம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன் பொழுது 30 முதிரை மரக்குற்றிகள் மற்றும் 33 பாலை மர தீராந்திகளுடனும்  இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.    

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்