டர்ஹாமில் முதியவர்களை குறிவைத்து கிரெடிட் கார்டு மோசடி: தமிழர்கள் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முதியவர்களை குறிவைத்து வங்கி மற்றும் கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஒரு ஆணும் பெண்ணும் 40 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் கூறினர். 

சந்தேக நபர்கள் வங்கி மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்களின் பணியாளர்கள் போல ஆள்மாறாட்டம் செய்யும் முதியவர்களை அழைத்து மோசடி செய்தனர் என புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் வங்கி அட்டைகள் மற்றும் கடவுச்சொற்களை மீட்டெடுப்பதற்காக ஒரு கூரியர் அனுப்பப்பட்டது, பின்னர் அவை மோசடியான கொள்முதல் செய்ய பயன்படுத்தப்பட்டன என்று பொலிஸார் கூறுகின்றனர். 

அஜாக்ஸ் பகுதியை சேர்ந்த லக்ஷாந்த் செல்வராஜா, 27, மற்றும் அக்ஷயா தர்மகுலேந்திரன், 25, ஆகியோர், 5,000 டாலர்களுக்கு மேல் மோசடி செய்தமை மற்றும் கிரெடிட் கார்டை அங்கீகரிக்காமல் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

Related Posts