உண்டியல் உடைத்து திருட்டு ; ஒருவர் கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே குறித்த நபர் அச்சுவேலி பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளார் .

குறித்த நபரிடம் இருந்து திருடப்பட்ட பணமும் சில பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

IPL 2024 Final Winner KKR | Thedipaar News

Related Posts