நிலச்சரிவில் உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆஸ்திரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் பப்புவா நியூ கினியா நாடு உள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை (மே 26) அதிகாலை, மலைப்பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

அதிகாலை சுமார் 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மக்கள் அனைவரும் அமைதியாக உறங்கி கொண்டிருந்த நேரம். 

அப்போது எதிர்பாராத இந்த நிலச்சரிவால் குறைந்த பட்சம் 6 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும் 3 கிராமங்கள் மண்சரிவுகளால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும், சுமார் 150 க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவுக்குள் சிக்கியுள்ளது. 

இந்தநிலையில், பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 2,000 க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக அந்நாடு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த நிலச்சரிவில் கட்டிடங்கள், விவசாய நிலங்கள் அழிந்ததுடன், வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வந்ததாகவும் 150- க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.


Related Posts