பாரில் நள்ளிரவில் தகராறு; ஒருவர் சுட்டு கொலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் ஜார்க்கண்டின் ராஞ்சி நகரில் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் பார் மூடப்பட்டது. பணியாளர்கள் கிளம்பி கொண்டிருந்தனர். 

அப்போது, 5 பேர் அந்த பாருக்கு வந்து மதுபானம் தரும்படி கேட்டு ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். பாரை மூடிய பின்னர் மதுபானம் தர முடியாது என ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த 5 பேரில் ஒருவர் சென்று விட்டு, திரும்பி வரும்போது கையில் துப்பாக்கி ஒன்றை கொண்டு வந்து ஊழியர்களை சுட்டார். 

ஒருவரது உடலில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த ஊழியரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளார்.

வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1794987835164155939

காளை கின்னஸ் சாதனை | Thedipaar News

Related Posts