இந்திய மீன்பிடி படகு, கடற்படை படகு – சிக்குண்டு கடற்படை வீரர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் சுற்றி வளைப்பின் போதே இவர் உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது, இந்திய மீன்பிடி படகிற்கும், கடற்படை படகிற்கும் இடையில் சிக்குண்டு, இந்த கடற்படை வீரர் உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கடற்றொழில் திணைக்களம் மேற்கொள்கின்றது. (P)


Related Posts