நண்பரிடம் ஒரே வரியில் பதில்! கூலாக காய் நகர்த்தும் விஜய்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் விஜய் தீவிர அரசியலில் களமிறங்கி 2026 தேர்தலில் போட்டியிட இருப்பதால் அதற்கு முன் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து முழுமையாக விலக இருக்கிறார். விஜய் அரசியலில் தற்போது இருந்தே தீவிரம் காட்ட தொடங்கிவிட்டார். சமீபத்தில் நடந்த கள்ளச்சாராய சம்பவத்திலேயே அதை பார்தோம். அவர் நேரடியாக மருத்துவமனை சென்று அனைவரையும் பார்த்து இருந்தார். விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக மாற்றம் பிறக்கும் என மக்கள் எதிர்ப்பார்த்து இருக்கிறார்கள். குறிப்பாக விஜய்யும் சீமானும் ஒன்றாக இணைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் மாற்றம் உண்டாகும் என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. ஆனால் அதெல்லாம் நடக்குமா? இருவரும் தனித்தனியே கொள்கைகளை கொண்டு வேறுபட்டு நிற்கிறார்களே? இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் அளித்த பேட்டியில் விஜய் சினிமாவில் இருந்து விலகுவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் தானே விஜய்யிடம் அதை பற்றி நேரடியாக கேட்டதாகவும் அதற்கு விஜய், கேள்விபட்டியா? அப்போ அதுதான் உண்மை என ஒரே வரியில் விஜய் கூறிவிட்டாராம். நண்பர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருக்கும் விஜய், தன்னுடைய நண்பர்களுள் ஒருவரான சஞ்சீவ்விடம் இப்படி பேசிய செய்தி வைரலாகி வருகிறது.

Related Posts