பறந்து வந்து விழுந்த குப்பை பலூன்... விமான நிலையத்தை மூடிய தென் கொரியா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சமீப காலமாக பலூன்கள் மூலம் தென் கொரியாவிற்குள் குப்பைகளை வீசுகிறது வடகொரியா. சிகரெட் துண்டுகள், வெற்று காகிதங்கள், கிழிந்த துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற குப்பைகள் அடங்கிய ஏராளமான பலூன்களை தென்கொரியாவிற்குள் அனுப்பி உள்ளது.

இந்த பலூன்களில் ஒரு பலூன், தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனையம் அருகே விமானங்கள் நிறுத்தப்படும் பகுதியில் விழுந்தது. மேலும் பல பலூன்கள் விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே பறந்துகொண்டிருந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப்பட்டது. ஓடுபாதையில் எந்த விமானமும் தரையிறக்க அனுமதிக்கப்படவில்லை. எந்த விமானமும் புறப்பட்டுச் செல்லவில்லை. மூன்று மணி நேரத்திற்கு பிறகு நிலைமை சரியானதும், விமான சேவை தொடங்கியது.

நள்ளிரவு 1:46 மணி முதல் அதிகாலை 4:44 மணி வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்குவதில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் ஓடுபாதைகள் மீண்டும் திறக்கப்பட்டு விமான சேவை தொடங்கியதாகவும் இன்சியான் சர்வதேச விமான நிலைய கழகம் தெரிவித்துள்ளது.

Related Posts