பட்டாசு ஆலையில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பட்டாசு ஆளையில் மூன்று அறைகள் சேதமடைந்த நிலையில் மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வெடி விபத்தின் போது பணியில் எத்தனை தொழிலாளர்கள் இருந்தார்கள், வேறு யாராவது விபத்தில் சிக்கி உள்ளார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சிறீதரன் எம் பியின் இல்லத்தின் முன் பதிவாகியுள்ள காட்சிகள் | Thedipaar News

Related Posts