சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 84,383 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து 22,629 பேரும், பிரித்தானியாவிலிருந்து 6,730 பேரும், சீனாவிலிருந்து 6,227 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த வருட ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 981,162 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


Related Posts