தொழிற்சங்க நடவடிக்கை - GMOA எச்சரிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தேசிய கண் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரை அந்த பதவியிலிருந்து நீக்கப்படாவிட்டால் நாளை (23) காலை 8 மணிமுதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
குறித்த வைத்தியரின் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகள் காரணமாக அவரை பதவி நீக்குமாறு கோருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் தேசிய கண் வைத்தியசாலையின் செயற்பாடுகளைச் சுமுகமாக முன்கொண்டு செல்வதற்காக, பொருத்தமான ஒருவர் அங்குப் பணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. (P)


Related Posts