ஹாமில்டன் பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹாமில்டனில்  குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 24 வயதான பைஸான் அலி என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி குறித்த நபர் வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டு கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த சம்பவத்தில் ஒருவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பைஸான் அலிக்கு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. எவ்வாறு எனினும் குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் இவரை கண்டால் அவரின் அருகாமைக்கு செல்லாமல் பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. 

 குறித்த சந்தேக நபருக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் ஹமில்டன் பகுதியில் இருக்கின்றார் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரை கண்டால் 911 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் இரத்து | Thedipaar News

Related Posts