ஹக்கீம் அதிரடி: ஒருவரை வெளியேற்றினார்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(4) கட்சியின் தலைமையமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது.

 லுஹர் தொழுகைக்கான  அதான் ஒலித்த வேளையில், கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

 இந்த சந்தர்ப்பத்தில், பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் எடுத்திருந்த

படங்களை  முகநூலில் பதிவேற்றம் செய்தது ,  விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளினால்  கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்  ,அவரை  கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் .

 கட்சியின் தலைவர் ஹக்கீம் உடனடி நடவடிக்கையாக யஹியாகானை  நடைபெற்று கொண்டிருந்த உயர்பீட கூட்டம் மற்றும் அடுத்த உயர்பீட கூட்டம் ஆகிய இரு அமர்வுகளில்  பங்குபற்றகூடாது என இடைநிறுத்துவதாக குறிப்பிட்டார்.

 கட்சியில் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி  பாராட்டியதோடு , இந்த முடிவை மனவருத்ததோடு எடுக்கவேண்டிய நேர்ந்தது பற்றியும் தலைவர்  தெரிவித்தார்.

தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு,    அவருடன்                        கைகுலுக்கி ,  முன்மாதிரியான முறையில் யஹியாகான்  அங்கிருந்து வெளியேறிச் சென்றார். (P)


Related Posts