கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சுற்றறிக்கையின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதம் வழங்குவதையோ அல்லது அதிகாரிகளை இடமாற்றம் செய்வதையோ கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கல்வித் துறையில் தொழிற்சங்கப் பிரதிநிதி எனக் கூறிக்கொள்பவர் மேற்படி தகவல் தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் செய்வதாக அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. (P)


Related Posts