பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முயற்சி ; ஒருவர் உயிரிழப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சீதுவ – கொட்டுகொட பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி செயற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சீதுவை பகுதியில் பொலிஸ் குழுவொன்று கார் ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 இதன்போது, காரிலிருந்த நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார்.

 இதன்போது, துப்பாக்கி செயற்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கியை வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், துப்பாக்கியை பறிக்க முயற்சித்த நபரின் கழுத்தில் துப்பாக்கி சூட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காயமடைந்த இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கியை பறிக்க முயற்சித்த நபர் உயிரிழந்துள்ளார்.

 சம்பவத்தில் பூகொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (P)

GOAT படத்தின் கதை | Thedipaar News

Related Posts